Friday, May 27, 2016

பித்அத் என்றால் என்ன?


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகதுஹு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.  

இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கற்றுத் தராத புதிய அமல்களை செய்வதற்கு பித்அத் என்று பெயர். மார்க்கத்தில் உருவாக்கப்படும் அல்லது நுழைக்கப்படும் இந்த புதிய அமல்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்.

இன்று நமது இஸ்லாமிய சமுதாயம் இத்தனை கூறுகளாக பிரிந்து சிதறுண்டுக் கிடப்பதற்கு மூலக்காரணம் புதிய பித்அத்களை மார்க்கம் என்ற பெயரில் செய்வதேயாகும். அல்லாஹ் தனது மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாகக் தன்னுடைய திருமறையில் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ் சென்றிருந்த போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்.

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல் குர்ஆன் 5:3)

நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில் கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்: –

“செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும். விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: –
நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்” அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம் :புகாரி, முஸ்லிம்.

இன்று நமது சமுதாய மக்களிடையே பரவலாகக் காணப்படும் மிக மோசமான பித்அத்கள் சிலவற்றைக் காண்போம்.

இறைவனால் மன்னிக்கப்படாத ஷிர்க் என்னும் இணைவைத்தல் அடங்கிய மவ்லிது பாடல்களை பக்திப் பரவசத்துடன் நன்மையை நாடி பாடுவது மீலாது விழா, பிறந்த நாள் விழா போன்ற விழாக்களைக் கொண்டாடுவது நபி (ஸல்) அவர்களால் புனித நாட்கள் என்று கூறப்படாத நாட்களை புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் நோன்பு நோற்பது. உதாரணங்களாக மிஹ்ராஜ் இரவு மற்றும் பராஅத் இரவு  நோன்பு நோற்பது, திக்ர் செய்கிறோம் என்ற பெயரில் ஆடல், பாடலுடன் கூடிய திக்ரு (ஹல்கா) செய்வது. இதில் இறைவனை அழைப்பதாகக் கூறிக்கொண்டு இறைவனின் அழகிய திருநாமங்களை திரித்துக் கூறுவதோடு, அவர்கள் புதிதாக வெளிவந்த சினிமாவின் பாடலுக்கேற்ற இசையில் இராகங்களை வடிவமைத்துக் கொண்டு ஆடிப்பாடுகின்றனர். இவ்வாறு செய்வதால் இறந்தவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கருதி இறந்தவர்களின் 7 ஆம் நாள் மற்றும் வருட பாத்திஹாக்களில் இந்தக் பித்அத்களை நிறைவேற்றுகின்றனர் இறந்தவர்களுக்காக 3, 7, 40 ஆம் நாள் மற்றும் வருடாந்தர பாத்திஹாக்கள் ஓதுவது. நபி (ஸல்) அவர்களால் கற்றுத்தரப்படாத ஸலவாத்து நாரியா என்ற ஷிர்க் வாத்தைகள் அடங்கியதை 4444 தடவை ஓதுவது இவைகளைச் செய்யக்கூடிய நமது சகோதர, சகோதரிகள், பின்வரும் காரணங்களையோ அல்லது அவற்றில் சிலவற்றையோ கூறுகிறார்கள்: –

நன்மைகளைத்தானே செய்கிறோம்! இதை ஏன் தடுக்கிறீர்கள்? இவைகளைச் செய்தால் அதிக நன்மைகள் கிடைக்குமே! பித்அத் பற்றி நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பது உண்மைதான்; ஆனால் நாங்கள் செய்வது நன்மையான காரியங்களைத்தான்; எனவே இவைகள் பித்அத்துல் ஹஸனா எனப்படும் நற்கருமங்களாகும் பித்அத்தே கூடாது என்னும் நீங்கள் நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தாத கார், விமானம், உடைகள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்களே! அவைகள் பித்அத் இல்லையா? நன்மையைத்தானே செய்கிறோம்; அதை ஏன் தடுக்கிறீர்கள் என்று கேட்கும் சகோதர சகோதரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக ஒரு அமலைச் சேர்ப்பது என்பது, அல்லாஹ்வுக்கோ, நபி (ஸல்) அவர்களுக்கோ தெரியாத ஒன்றை நாம் கற்றுத்தருவது போன்றதாகும். ஏனென்றால் அதிக நன்மையை பெற்றுத்தரும் இத்தகைய நல்ல அமல்களை அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ கூற மறந்து விட்டனர் அல்லது கூறாமல் விட்டுச் சென்று விட்டார்கள். அதை நான் செய்து முழுமைப் படுத்துகிறேன் என்று கருதுவது போலகும். (நவூது பில்லாஹ் மின்ஹா) அல்லாஹ் நம்மை அத்தகைய தீய எண்ணங்களிலிருந்து காப்பாற்றுவானாக. நாம் செய்ய வேண்டிய அனைத்து வகையான அமல்களைப் பற்றியும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தெளிவாக விளக்கப்பட்டு மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் போது நாம் புதிய அமல்களைச் சேர்ப்பதற்கு வேண்டிய அவசியம் எதற்கு? இதில் நாம் ஒன்றைப் புரிந்துக் கொள்ள வேண்டும். நாம் இந்த பித்அத் ஐ பின்பற்றுவதனாலோ அல்லது அதனை செயற்படுத்த முயற்சிப்பதனாலோ வெற்றியடைய போவது இப்லிஸ் தான். இதனை நன்மையாக காட்டி நம்மிடம் இருக்கும் நன்மைகள் அனைத்தையும் நாசமாக்கி அல்லாஹ்வுடைய கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக்குவதே அவனுடைய திட்டம் எனவே நாம் சிந்திக்க வேண்டிய அவசியமும் இதுதான்.

“பித்அத்துகள் அனைத்துமே நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகள்” என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்க நாம் எவ்வாறு பித்அத்துகளை நல்ல பித்அத் என்றும் தீயவை என்றும் தரம் பிரிப்பது? நமது சமுதாயத்திற்கு மார்க்கத்தை போதிக்கும் அறிஞர்களும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாக மார்க்கத்தில் உருவாக்கப்பட்ட புதிய அமல்களுக்கு ஆதரவு தந்து அவைகள் நடைபெறும் இடங்களுக்கும் சென்று அவற்றில் கலந்து கொள்கின்றனர். உண்மை பேசினால் எதிப்பு வரும், ஆதாயம், வருமானம் தேயும் என அறிந்து சிலர் அசட்டுத் தைரியத்துடன் மார்க்கத்தில் புதிது புதிதாக உருவானவைகளை பித்அத்துல் ஹஸனா (அழகான பித்அத்) என்று பெயரிட்டு அனுமதி வழங்கி ஆதரிக்கின்றனர். நபி (ஸல்) அவர்களோ நல்ல பித்அத், கெட்ட பித்அத் என பித்அத்களை வேறுபடுத்திக் காட்ட வில்லை. பித்அத்கள் அனைத்தும் வழிகேடுகள் என்று தான் சொன்னார்கள்.

இங்கு முக்கியமாக நாம் ஒன்றை  புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் மார்க்கத்தை பரிபூரணப்படுத்திவிட்டதாக கூறுகிறானே தவிர இந்த உலக வாழ்க்கை வசதிகளை இல்லை. அல்லாஹ் கூறுகிறான்: –

“இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்” (அல் குர்ஆன் 16:8)

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த குதிரைகள், கோவேறு கழுதைககள் மற்றும் கழுதைகளை வாகனங்களாக படைத்திருப்பதாக் கூறியதோடு இன்னும் நீங்கள் அறியாத வாகனங்களைப்படைத்திருப்பதாக கூறுகிறான். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் இன்று நாம் பயன் படுத்திக் கொண்டிருக்கும் கார், விமானம் போன்ற வாகனங்களை மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய பிற வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளான் என்பதாகும்.

எனவே அவர்கள் எடுத்துவைக்கும் நாம் பயன்படுத்தும் கார், விமானம் போன்றவையும் பித்அத் ஆகாதா? என்ற கேள்வியும் அர்த்தமற்றதாகும். பித்அத் என்பது அமல்களில் புதிதாக உருவாக்குவது தானே தவிர உலக காரியங்களின் நடைமுறைகளில் அல்ல.

எனவே சகோதர சகோதரிகளே! சற்று சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் பித்அத்களைப் பற்றி கடுமையாக எச்சரித்திருக்க நாம் மேலே கூறிய மவ்லிது, ஹத்தம், பாத்திஹா போன்ற நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத செயல்களை பித்அத்துல் ஹஸனா என்ற பெயரிலும், நம்முடைய முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்றும் செய்தோமேயானால் அது நிச்சயமாக வழிகேடேயாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் ‘நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும்செய்தால் அது நிராகரிக்கப்படும்’

“(அமலில்) ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்

எனவே சகோதர சகோதரிகளே நபி (ஸல்) அவர்களால் கடுமையாக எச்சரிக்கபட்ட இந்த பித்அத்களை நாம் தவிர்த்துக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இத்தீமைகளைப் பற்றி எடுத்துக் கூற வல்ல இறைவன் நமக்கு அருள்பாலிக்க இறைவனிம் பிரார்த்திப்போம்.

Thursday, May 26, 2016

நாம் தேர்வு செய்யவேண்டிய பாதை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகதுஹு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.  

(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-

பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-

ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-

நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.

எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன்இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,

நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,

அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.

ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,

இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,

அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.

ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது. (92:1-11)

         

இவை ''ஸூரத்துல் லைலின்'' வசனங்களாகும். இதன் ஆரம்பத்தில் அல்லாஹ் இரவின் மீதும் பகலின் மீதும் சத்தியம் செய்கிறான். வேறு சில ஸூராக்களில் சூரியன், சந்திரன், நட்சத்திரம், பேனா, காலம் போன்றவற்றிலும் அல்லாஹ் சத்தியம் செய்திருக்கிறான்.

அவன் இந்த படைப்புக்கள் பால் மக்களது கவனத்தைத் திருப்பி அவற்றின் மகத்துவத்தை அவர்கள் உணரும்படிச் செய்வதே இந்த சத்தியங்களது நோக்கம் என்பது குர்ஆன் விரிவுரையாளர்களது கருத்தாகும். ஒரு சொகுசான விலை உயர்ந்த வாகனத்தைப் பார்க்கும் நாம் அதனைச் செய்த பொறியியலாளரது அறிவை மெச்சுகின்றோம். அவன் மீது எமக்கு ஓர் அபிமானம் தோன்றுகின்றது. அதுபோலவே பிரபஞ்சத்தையும் அதன் செயற்பாடுகளையும் காணும் நாம் அல்லாஹ்வை ஞாபகப்படுத்த வேண்டுமென அல்லாஹ் இந்த சத்தியங்கள் மூலம் நாடுகிறான்.

இங்கு இரவு மீதும் பகல் மீதும் அல்லாஹ் சத்தியம் செய்திருக்கின்றான். இந்த இரவும் பகலும் உண்மையில் அல்லாஹ் இருக்கின்றான் என்பதைக் காட்டும் மிகப் பெரும் அத்தாட்சிகளாகும். அல்லாஹ் வேறு ஓர் இடத்தில் ''இரவையம் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக்கியிருக்கிறோம்'' என்று குறிப்பிடுகின்றான். இரவு பகல் மாறி மாறி வருவது தினந்தோறும் இடம் பெறுவதால் அவற்றின் பெறுமதி, முக்கியத்துவம், அவற்றை உண்டாக்குபவன் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதில்லை. ஆனால், இது எப்பொழுதாவது ஒழுங்காக நடைபெறாது விடுமானல் அப்போது அதன் அருமை எமக்குப் புரியும்.

வேலைக்களைப்பாலும், சிந்தனைக் களைப்பாலும் பாதிக்கப்படும் மக்களுடைய உறுப்புக்களும் உள்ளங்களும் இரவில் தான் நிம்மதி காண்கின்றன. இரவின் குளிர்ச்சியும் இதமும் அமைதியும் உள்ளத்துக்குப் பெரும் ஆறுதலைத் தருகின்றன. மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், மிருகங்கள் கூட இரவை ஓய்வெடுப்பதற்கான காலமாகவே பயன்படுத்துகின்றன. இந்த ஓய்வும் தூக்கமுமில்லாமல் வாழ்வு இயங்க மாட்டாது என்பது விஞ்ஞானம் கூறும் உண்மையாகும். எனவே, அல்லாஹ், ''நாம் இரவை உங்களுக்கு ஒரு போர்வையாக ஆக்கினோம்'' என்று கூறுகின்றான்.

பகல் பொழுதும் இரவை விட அணுவளவேனும் முக்கியத்துவம் குறைந்ததல்ல. மக்கள் பகல் காலத்தில் தான் தமது ஜீவனோபாயத்தைத் தேடி பூமியில் பரந்து செல்கிறார்கள். பகலின் வெளிச்சமும், உஷ்ணமும் உழைப்பதற்கான சூழலை மனிதனுக்கு உருவாக்குகின்றன. மனிதன் சுறுசுறுப்பாகப் பணி செய்கின்றான். அல்லாஹ் வேறோர் இடத்தில், ''நாம் பகலை ஜீவனோபாயாத்துக்காக ஆக்கினோம்'' என்று கூறுகின்றான்.

ஆகவே ஒன்றன் பின் ஒன்றாக் இரவையும், பகலையும் அல்லாஹ் வரச் செய்வதில், மகத்தான் பல நோக்கங்கள் இருக்கின்றன. அதனை அவனையன்றி வேறு யாரும் செய்யவில்லை. செய்ததாக யாரும் வாதிடவும் முடியாது.

அடுத்து தொடர்ந்தும் பகலாக இருப்பதிலோ தொடர்ந்தும் இரவு நீடித்து விட்டாலோ அது பயனற்றுப் போய் விடும். இதனை குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. ''மறுமை நாள் வரும் வரை அல்லாஹ் இரவை நீடித்ததாக ஆக்கி விட்டால் உங்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த இறைவன் வெளிச்சத்தைத் தர முடியும். அதே போல் மறுமை வரைக்கும் அல்லாஹ் பகலை நீடித்ததாக ஆக்கி விட்டால் நீங்கள் நிம்மதி காணும் இரவை அல்லாஹ்வைத் தவிர வேறு யார் தான் கொண்டு வர முடியும்'' என்று கேட்கின்றான்.

மனிதன் தொழில்நுட்பத்தில் எவ்வளவு முன்னேறினாலும் பகல் பொழுதில் அல்லது இரவு நேரத்தில் ஒரு வினாடியைக் கூட அவனால் அதிகரித்து விட முடியாது. அல்லது குறைத்து விட முடியாது. அது அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிலுள்ள அம்சமாகும். இது இறைவனைக் காட்டும் அத்தாட்சியேயாகும். எனவே மனித வாழ்வுக்கு அவசியமான இரவையும், பகலையும் படைத்த அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்துவது அவசியமாகும்.

''ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக'' என்பது ஸூரத்துல் லைலின் மூன்றாவது வசனமாகும். இங்கும் கூட ஆண், பெண் என்ற பால் வேறுபாட்டிலுள்ள அதிசயத்தையும் நோக்கத்தையும் பற்றி நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என அல்லாஹ் எதிர்பார்க்கின்றான். இதற்கு முன்னால் உள்ள வசனத்தில் அல்லாஹ் இரவின் மீதும் பகலின் மீதும் சத்தியம் செய்வது அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தியது போலவே இங்கும் ஆண்-பெண் என்ற இரு சாராரின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றது.

பெண்ணுடைய கர்ப்ப அறையினுள் ஆண் செலுத்தும் இந்திரியத் துளிகள் அனைத்தும் உருவத்தில் ஒரே மாதிரியே இருக்கின்றன. ஆனால் சில இந்திரியத் துளிகள் ஆண் குழந்தை பிறக்கக் காரணமாக அமைகின்றன. இன்னும் சில பெண் குழந்தை பிறக்கக் காரணமாக அமைகின்றன. இவ்வாறு ஆண்-பெண் என்று வெவ்வேறு அமைப்பில் சிசுக்கள் உருவாகுவதற்குக் காரணம் என்ன என்று விஞ்ஞானத்தால் கூற முடியாதுள்ளது. மனிதன் தான் விரும்பும் வகையில் ஆண் குழந்தைகளை மட்டுமோ அல்லது பெண் குழந்தைகளை மட்டுமோ பெற்றெடுக்க முடியாது. அப்படியானால் இது இறைவனுடைய திட்டமிடலின் அடிப்படையிலும் விருப்பத்தின் பேரிலும் இடம் பெறும் அற்புத நிகழ்வாகும்.

உலகில் ஆண்களின் தொகையும், பெண்களின் தொகையும் ஓரளவிற்கு சமமாகவே இருக்கிறது. இதனை ஒரு தற்செயல் நிகழ்வாக, எதேர்ச்சையாக நடப்பதாகக் கூற முடியாது. வரலாற்று நெடுகிலும் இந்த சமநிலைத் தன்மை பேணப்பட்டு வந்திருக்கின்றது. அப்படியானால் யாரோ இந்த விகிதாசாரத்தைத் தீர்மானிக்கிறார் என்பது எமது பகுத்தறிவு சொல்கிறது. இதனை மனிதன் தீர்மானிக்கவில்லை என்று எமக்குத் தெரியும்.காரணம் தான் உலகில் பிறந்ததற்கே அவன் காரணமல்லவா! இங்கு இறைவனின் நாட்டத்தின் முன் மனிதனது தெரிவுரிமை தூசுக்கும் மதிப்பில்லாமல் போய் விடுகின்றது. ஆகவே, உலகில் ஆண் பெண் விகிதாச்சாரத்தை அல்லாஹ் தான் பேணி வருகின்றான். இதனையே குர்ஆன் வேறு ஓர் இடத்தில்,

''அல்லாஹ் தான் நாடியோர்க்கு பெண் குழந்தையையும் தான் நாடியோருக்கு ஆண் குழந்தையையும் அன்பளிப்பாக வழங்குகின்றான்'' என்று கருத்தாழத்தோடு சொல்லுகின்றது.

எனவே, ஆண்-பெண் விகிதாசாரம் எப்போதும் சமநிலையில் வைத்துப் பேணப்படுகிறது. அதில் ஓர் ஒழுங்கும் நுண்ணிய திட்டமிடலும் காணப்படுகிறது. நிச்சயமாக இது இறைவன் ஒருவன் இருக்கிறான். அவனே இயக்குவிக்கிறான் என்பதற்கான பலமான அத்தாட்சியாகும்.

அதேபோல் ஆண்-பெண் என்ற இருபாலாரும் உலக இயக்கத்துக்குத் தேவைப்படுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனிச் சிறப்பம்சங்களையும் பொறுப்புக்களையும் அல்லாஹ் கொடுத்து வைத்திருக்கின்றான். மனித நாகரீகத்தின் ஆரம்பம் ஆதம்-ஹவ்வா தம்பதிகளிலிருந்தே ஆரம்பமாகிறது.

ஆண்-பெண் என்ற இரு பாலார் இருப்பதனால் தான் இனப்பெருக்கம் நடக்கிறது. ஒருவர் மற்றவருடைய குறையை நிரப்பிக் கொள்கிறார்கள். ஆண்கள் மட்டும் அல்லது பெண்கள் மட்டும் உலகில் இருந்தால் ஒரு சில வருடங்களிலேயே மனித இனம் அழிந்து விடும். எனவே, இத்தகைய பல நோக்கங்களையும் உள்ளடக்கியதாக அல்லாஹ் ஆணையும் பெண்ணையும் படைத்திருப்பதனால், அவன் நிச்சயம் புகழுக்கும் வழிபாட்டுக்கும் உரியவனாகின்றான்.

நாம் விளக்க வந்த வசனம் ஆணையும் பெண்ணையும் படைத்த அல்லாஹ் மீது சத்தியமாக என்று கூறுவதற்கு இதுவே காரணமாகும்.

''மனிதர்களே..! உங்களது முயற்சிகள் பல வகைப்பட்டனவாக இருக்கின்றன'' என்பது ஸூரத்துல் லைலின் நான்காம் வசனமாகும்.

மக்கள் பல்வேறுபட்ட உழைப்புக்களிலும், செயற்பாடுகளிலும், முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளை நன்மையான முயற்சிகள், தீய முயற்சிகள் என்று இரு பெரும் பிரிவாகப் பிரிக்க முடியும். நன்மையான செயல்களைப் பொறுத்தவரை அவை தூய்மையான நோக்கத்தோடு செய்யப்படுமானால் அவற்றைச் செய்பவருக்கு அவை பயன்படுவதோடு, அவற்றினால் உலக மக்களும் பயனடைகின்றார்கள். அவ்றபை; பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். அவற்றின் காரணமாக மனித வாழ்வைப் பாதிக்கும் பல அம்சங்கள் அழிந்து போகின்றன. உலகில் மாத்திரமன்றி மறுமையிலும் கூட அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் மகத்தான் கூலியும் அந்த நற்கருமங்களுக்காகக் கிடைக்கின்றன. இத்தகைய கருமங்களையே அல்குர்ஆன் அஸ்-ஸாலிஹாத் எனப் பெயரிடுகின்றது.

இதற்கு நேர் எதிர்த்திசையில் தீய செயல்களை நாம் பார்க்கிறோம். இவற்றில் மனிதன் ஈடுபடுவதால் அவனுக்கே அழிவைத் தேடிக் கொள்கிறான். பிறரையும் தொந்தரவு செய்கின்றான். அவர்களைக் கஷ்டத்தில் வீழ்த்துகிறான். உலகிலும் மறுமையிலும் இறைவனது அதிருப்தியையும் கோபத்தையும் சம்பாதித்து நரகம் நுழைகிறான். இந்த விரும்பத்தகாத அனைத்துக்கும் இந்த தீய கருமங்கள் தான் காரணமாகின்றன.

எனவே நற்கருமங்களும் தீய கருமங்களும் ஒருக்காலும் ஒன்றிணைய முடியாது. நன்மை செய்பவர்கள் தீயவர்கள் பட்டியலில் உள்ளவர்களுடன் இணைக்கப்பட முடியாது. இந்தக் கருத்தை அல்லாஹ் அல்குர்அனில் வேறொரு இடத்தில் பின்வருமாறு கூறுகின்றான். ''நகரவாசிகளும் சுவர்க்கவாசிகளும் சமனாக மாட்டார்கள். இவர்களின் சொர்க்கவாதிகள் தான் வெற்றி பெற்றவர்கள்'' என்று இருசாராரையும் பிரித்து நோக்குகின்றான்.

எனவே, உலகில் நன்மை என்ற ஒன்றும் தீமை என்ற இன்னொன்றும் இருக்கவே செய்கின்றது. ஆனால் நாஸ்திகவாதிகள் இவ்வாறு செயல்களை இரு பிரிவாகப் பிரிப்பதில்லை. அவர்கள் எந்தச் செயல்களையும் உலகில்; செய்து கொள்ளலாம். அனைத்தும் அனுமதிக்கப்பட்டவையே என்று கருதுகிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள், ''மக்கள் அதிகாலையிலேயே பல்வேறு முயற்சிகளில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். சிலர் பாவமான செயல்களைச் செய்வதன் மூலம் தமது ஆத்மாக்களை அழித்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் நன்மையான காரியங்களில் ஈடுபடுவதனால் தமது உள்ளத்தை ஷைத்தானிடமிருந்து விடுதலை செய்து கொள்கிறார்கள்'' என்று கூறி மக்களில் இரு வேறு பிரிவினரின் முயற்சிகள் வெவ்வேறு விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை உணர்த்தினார்கள்.
அல்லாஹ் வேறு ஓர் இடத்தில்,

''யார் விசுவாசம் கொண்டிருக்கிறாரோ அவரும், பாவம் செய்யக் கூடியவனும் சமனாகுவார்களா?'' என்று கேள்வி எழுப்புகின்றான்.

எனவே நன்மை வேறு, தீமை வேறு. இறைநிராகரிப்பாளர் வேறு, முஸ்லிம் வேறு. இருவரும் ஒருக்காலும் கூலி பெறுவதில் சமமானவர்களாகக் கணிக்கப்பட மாட்டார்கள். இந்தக் கருத்தை இதற்கு முன்னால் உள்ள இந்த ஸூராவின் வசனங்களும் உணர்த்துகின்றன. இங்கு இரவு-பகல், ஆண்-பெண் என்று இரு வேறு கூறுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. எனவே, இரவும் பகலும் ஒன்றல்ல என்பது போலவே ஆணும் பெண்ணும் வித்தியாசமான இயல்புகள் கொண்டு படைக்கப்பட்டவர்கள் போலவே நற்கருமங்களும் தீய காரியங்களும் வெவ்வேறானவை. அவற்றுக்காக வழங்கப்படும் கூலிகளும் அதற்கேற்ப வேறுபடும் என்று அல்லாஹ் உணர்த்த விரும்புகின்றான்.

எனவே, அல்லாஹ்வுடைய நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் மாத்திரமே தப்ப முடியும். அவர்கள் மாத்திரமே கரை சேருவார்கள். அவர்களைக் கெட்டவர்களது கூட்டத்தில் சேர்ப்பது மிகப் பெரும் அநியாயம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

''முஸ்லிம்களைக் குற்றவாளிகள் போல் நாம் நடாத்துவோமா? இல்லவே இல்லை'' என்று கூறுகின்றான்.

எனவே, மக்களது செயல்பாடுகள் எப்படியானவையாக இருந்தாலும் அல்லாஹ் விரும்பும் செயல்கள் மட்டுமே பயனளிக்கும் என்று நாம் விளங்க வேண்டும்.

''யார் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்து, இறைவனை அஞ்சிப் பயந்து வாழுகிறாரோ, மேலும் மறுமை நாளை உண்மைப்படுத்துகிறாரோ அவரை நாம் மிக இலகுவான வழியின்பால் வழிகாட்டி விடுவோம்''.

இதற்கு முன்னாலுள்ள வசனத்தில் அல்லாஹ் மக்கள் பலவகைப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்றும், அவற்றின் விளைவுகள் அச்செயல்களைப் பொறுத்து வித்தியாசப்படும் என்றும் கூறினான். தற்போது சிறந்த செயல்களில் ஈடுபடுவது என்றால் என்ன? என்பதற்கு உதாரணம் கூறுகிறான். இந்த வசனம் அபூபக்கர் (ரலி) அவர்கள் சம்பந்தமாக இறக்கப்பட்டதாகப் பெரும்பாலான குர்ஆன் விரிவுரையாளர்கள் கருதுகிறார்கள். அடிமையாக இருந்தநிலையில் இஸ்லாத்தைத் தழுவிய வயோதிபர்களையும், பெண்களையும் அவர்களது எஜமானர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, அபூபக்கர் (ரலி) அவர்கள் விடுதலை செய்து வந்தார்கள். அப்போது அவரது தந்தை அபூகுஹாபா, ''மகனே! நல்ல உடற்கட்டுள்ள ஆண்களை நீ விடுதலை செய்தால் உன்னை அவர்கள் பாதுகாத்து உனக்கு பக்க துணையாக இருப்பார்கள் அல்லவா? என்று கேட்டார். அதற்கு அபூபக்கர் (ரலி) அவாகள், ''தந்தையே! நான் இந்த நற்செயலுக்காக அல்லாஹ்வின் கூலியை எதிர்ப்பார்க்கின்றேனே தவிர உலக இலாபத்தையல்ல'' என்று உருக்கமாகப் பதிலளித்தார்கள்.

ஆனால் இந்த வசனம் அபூபக்கர் (ரலி) சம்பந்தமாக இறங்கினாலும் அது தரும் கருத்து யாவருக்கும் பொதுவானது. யார் '' அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கிறாரோ'' என்பதன் பொருள் நன்மையான காரியங்கள் எந்த ஒன்றிலாவது செய்யப்படும் செலவைக் குறிக்கும். அடிமைகளை விடுதலை செய்வது, கைதிகளை விடுவிப்பது, ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்குவது, பொதுவாகச் சமூகத்திற்குப் பயனளிக்கும் திட்டங்களுக்கு உதவுவது, ஜிஹாதுக்காகச் செலவளிப்பது, இறைநிராகரிப்பாளர்களுக்கு எதிராகப் போராடுவதற்காக முஸ்லிம்களைச் சகல வழிகளிலும் பலப்படுத்துவது போன்ற சகல நல்ல வழிகளையும் இது குறிக்கும்.

இவ்வாறு செலவு செய்பவருக்கு இருக்கும் அடுத்த பண்பு ''அவர் அல்லாஹ்வை பயப்படுபவராக இருப்பார். தீய காரியங்களிலிருந்து விலகியிருப்பார். மக்களுக்கு நோவினை செய்யாதிருப்பார். தனது ஆத்மாவை பாவச் செயல்களிலிருந்து தூரப்படுத்தி வைப்பார்'' என்பதாகும்.

அவருக்குள்ள அடுத்த பண்பு அவர் தனது தோழருக்கு நல்ல கூலி கிடைக்கும் என நம்புவார். அவர் மறுமையை, சுவர்க்கத்தை நம்புவார் என்பதாகும்.

இவ்வாறு செலவு செய்து இறைவனை அஞ்சிப் பயந்து மறுமையையும் அங்கு அல்லாஹ் கொடுக்கக் காத்திருக்கும் நற்கூலிகளையும் நம்பும் ஒருவருக்கு அல்லாஹ் செய்யவுள்ள பிரதியுபகாரம் எவ்வாறு அமையும் என்பதை அடுத்த வசனம் விளக்குகிறது.

''மிகு இலகுவான வழியை அவருக்கு மிக இலகுபடுத்திக் கொடுப்போம்''. அதாவது, மறுமையிலும் உலகத்திலும் அவருக்கு மிகச் சிறந்ததொரு வாழ்க்கை தான் பரிசாக வழங்கப்படும். அவரது மனதில் கவலையுமிருக்காது. அவரது வாழ்க்கை மிக இலகுவானதாக இருக்கும். எந்தச் சிக்கலும் சஞ்சலமும் அவரை அணுகாது. அவருக்கு அல்லாஹ் வழங்கும் வாழ்க்கை ஏனைய மனிதர்களது வாழ்வுடன் இணைந்து போகும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் அல்லாஹ் படைத்துள்ள எந்தச் சட்ட திட்டங்களுடனும் பௌதிக விதிகளுடனும் அவர் மோதிக் கொள்ள மாட்டார்.

அவர் இறைவனது சட்டத்தைப் புறக்கணித்து அதனை ஒதுக்கி வாழும் வழி தவறிய மக்களுடன் மாத்திரமே மோதிக் கொள்வார்.

அவனது உள்ளத்தில் ஈமானின் சுவை இருக்கும். அவரது பேச்சில், செயலில், சிந்தனையில் இலகுத்தன்மை இருக்கும். எந்த அம்சத்தையும் அவர் மிக இலகுவாகவே கையாள்வார். இதே பண்புகளைத் தான் நபிகளார் (ஸல்) அவர்களும் பெற்றிருந்தார்கள். எனவே தான் அல்லாஹ் அவர்களைப் பார்த்து,

''நபியே! உம்மை நாம் மிக இலகுவான பாதையின் பால் மிக இலகுவாகவே வழி நடாத்துவோம்''. என்று கூறுகின்றான். இது நல்ல மனிதனுக்கு அல்லாஹ் செய்யும் மிகப் பெரும் உபகாரமாகும். ஆனால், செலவு செய்யாமல், இறைவன் தேவையில்லை என்று நினைத்து மறுமையைப் பொய்ப்பிப்பவனுக்குரிய கூலி நேர் எதிராக அமையும் என்று அடுத்த வசனம் கூறுகிறது.

''யார் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் உலோபியாக இருக்கிறானோ, அதேவேளை தனக்கு இறைவன் தேவையில்லை என்று கருதி மறுமையைப் பொய்ப்பிக்கின்றானோ அவனை நாம் மிக மிகக் கடுமையான பாதையில் இலகுவாகச் செலுத்தி விடுவோம். அவன் நரகத்தில் விழும் போது அவனது பணம் அவனுக்குப் பயனளிக்காது''.

இதற்கு முன்னாலுள்ள வசனம், இறைவனது பாதையில் செலவு செய்து வாழ்ந்த மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய உயர்ந்த வெகுமதியைப் பற்றிக் கூறியது. ஆனால் இந்த வசனத்தில் அல்லாஹ் குற்றவாளியின் பிரதான பண்புகளைப் பற்றிக் கூறுகின்றான். அந்தக் குற்றவாளியின்

    முதலாவது பண்பு கஞ்சத்தனமாகும். அந்த நிராகரிப்பாளர் தனது செல்வத்தை பொதுநலனுக்காக உபயோகப்படுத்த மாட்டான். மாறாக, தனது இச்சைகளைப் பூர்த்தி செய்யவும் மற்றும் சொந்தத் தேவைகளுக்காகவும் மாத்திரமே செலவு செய்வான். அவனது உள்ளத்தில் பிறர் மீது இரக்க உணர்வு அணுவளவும் இருக்காது. அவர்களது கஷ்ட துன்பங்களில் பங்கு கொண்டு அவர்களது துயர் துடைக்க வேண்டுமே என்று அவன் சிந்திக்க மாட்டான். தனக்கு வேறு எவரும் தேவையில்லை என்று அவன் நினைக்கிறான். தான் மக்களில் ஒருவன் என்ற உணர்வு இல்லாதவனாக அவர்களை விட்டும் தூரமாகி விடுகிறான். அதேபோல் இறைவனது உதவியும், அருட்கடாட்சங்களும் தனக்குத் தேவையில்லை என்றும் அவன் நினைப்பான். தன்னிடம் குவிந்துள்ள செல்வங்கள் யாவும் தனது சொந்த முயற்சியால் கிடைத்ததாகவே அவன் கருதுவான். உலக மக்கள் தனக்குத் தேவையில்லை என்று அவன் நினைப்பதால் தான் அவர்களை அவன் கவனிப்பதில்லை. இறைவனது உதவி தனக்குத் தேவையில்லை என்றும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் தனக்கு வந்த அருட்கொடைகளுக்கு அல்லாஹ் காரணமல்ல எனவும் அவன் நினைப்பதால் தான் அந்த அல்லாஹ்வுடைய பாதையில் அவன் செலவு செய்யாமலிருக்கின்றான். எனவே தான் பிறர் தனக்குத் தேவையில்லை என்று அவன் எண்ணுகிறான் என அல்லாஹ் பொதுவாகக் கூறுகிறான்.

    இந்த நிரகாரிப்பாளருக்குள்ள அடுத்த பண்பு, அவன் மறுமையைப் பொய்ப்பித்தான் என்பதாகும். தான் செலவளிக்கும் பணத்துக்கான கூலி மறுமையில் வழங்கப்படும் என நம்புவதில்லை. செலவளித்தால் சுவர்க்கம் கிடைக்கும் என அவன் ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே, அவன் கஞ்சனாக இருப்பதற்கும் இறைவன் தனக்குத் தேவையில்லை என்று கருதுவதற்கும் அவனிடம் மறுமை நாள் பற்றிய நம்பிக்கை இல்லாதிருப்பதே காரணமாகும்.

இந்த வகையான மனிதனுக்கு வழங்கப்படும் கூலி மோசமானதாக அமைகிறது. எனவே, ''மிகக் கொடுமையான வழியில் அவனை இலகுவாகச் செல்ல விட்டு விடுவோம்'' என்று அல்லாஹ் கூறுகிறான். இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்காதவனது வாழ்க்கை நெருக்கடிகளும், சஞ்சலங்களும் நிறைந்ததாக இருக்கும். மனித இயல்புடன் அவன் அடிக்கடி மோதிக் கொள்வான். பிரபஞ்சத்தில் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்டுள்ள பௌதிக விதிகளுடனும் அவன் அடிக்கடி மோதிக் கொள்வான். அவன் சீரான வழியிலிருந்து விலகிச் செல்வதால் அவனுக்கு எங்கும் பிரச்னைகளின் மயமாகவே இருக்கும். இதே கருத்தை அல்குர்ஆனில் அல்லாஹ் வேறு ஓர் இடத்தில்,

''யார் எனது வாழ்க்கைத் திட்டத்தைப் புறக்கணிக்கிறாரோ அவருக்கு நெருக்கடியான வாழ்க்கை இருக்கிறது'' என்று கூறுகிறான்.

அதுமட்டுமல்ல, இவ்வாறு செலவு செய்யாது, அல்லாஹ்வை மறந்து மறுமை நாளை மறந்து வாழ்பவன் நரகத்தில் வீழ்வது நிச்சயம். அப்போது அவனைக் காப்பாற்ற அவனது செல்வத்துக்கு சக்தியிருக்காது என்று அடுத்த வசனம் அமைகிறது.

அவன் நரகில் விழும்போது அவனுக்கு அவனது பணத்தால் எந்தப் பயனும் விளையாதே என்று இங்கு அல்லாஹ் கூறுகின்றான். தனக்கு இறைவன் தேவையில்லை என்றவனுக்குப் பணம் உதவிக்கு வரும் என்ற ஆணவம் இருந்தது. இப்போது எங்கே அந்தப் பணம் என்று அல்லாஹ் பரிகாசமாகக் கூறுவது போல் இவ்வசனம் அமைகின்றது. எனவே மனிதன் ஜெயம் பெற்ற இந்த வகையான இறுமாப்பை விட்டு விட்டு நேர்வழியில் நடக்க ஆரம்பிக்க வேண்டும்.


இதுவே நாமும் தெரிவு செய்ய வேண்டிய பாதையாகும்.

Friday, May 13, 2016






The Most Power full Dua

இல்லுமினாட்டிகள் (இரகசிய சமுதாயம் 2) ILLUMINATI CONSPIRACY SECRETS

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகதுஹு


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.       

இல்லுமினாட்டிகள்   (இரகசிய சமுதாயம் 2)  ILLUMINATI  CONSPIRACY  SECRETS  

டயானாவின் வீழ்ச்சி வில்லியமுக்கு எழுச்சி

வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales, இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், பிறப்பு : ஜூலை 1, 1961). இயேசுவின் இரத்தபந்தத்தைப் பாதுகாக்கும் புனிதக்கிண்ணமாக வர்ணிக்கப்பட்ட டயானாவிற்கும், இளவரசர் சார்லஸூக்கும் 1981 ஜூலை 29 ம் நாள் திருமணம் நடந்தது. வில்லியம் (1982) ஹாரி (1984) என்ற இருபுதல்வர்களைக் கண்ட இத்தம்பதியினர் தங்களின் 15வருட மணவாழ்க்கைக்குப் பின்னர் 1996 ம்ஆண்டு ஆகஸ்டு 28 ம் நாள் இவ்விருவருக்கும் மணமுறிவு ஏற்பட்டது.
இளவரசர் சார்லஸூடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொதுவாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். உலகளாவிய அளவில்ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.

அந்த 15 வருட இங்கிலாந்தின் இளவரசி என்ற படோட வாழ்க்கையால் மீடியாக்களில் படாதுபாடுபட்டார் டயானா. இவரது அசிங்கங்கள் நிறைந்த கவர்ச்சி வாழ்க்கையை நாம் எழுதித்தான் உங்களுக்குத் தெரியவேண்டும் என்றில்லை. அந்த அளவிற்கு அறைகுறை ஆடை காட்சிகள், குடிபோதையில் அரைநிர்வான ஆட்டங்கள் என்று மேற்கத்திய கலாச்சார அனாச்சாரங்கள் இவரை கவ்விக்கொண்டுதான் இருந்தன என்பதே உண்மையிலும் உண்மை.


எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)



இந்த விவாகரத்திற்குப் பின்னர், தன்னை மருமகளாக ஏற்ற வின்ட்ஸர் அரச குடும்பத்தாலேயே தான் கொலைசெய்யப்பட இருக்கிறோம் என்பதை சுதாரித்துக்கொண்டார். அதை ஆவனமாகவும் பதிவுசெய்து கீழ்க்கண்டவாறு எழுதியும் வைத்தார். 

·                     I am sitting here at my desk today in October, longing for someone to help me & encourage me to keep strong & hold my head high. This particular phase in my life is the most dangerous. My Husband is planning 'an accident' in my car. brake failure & serious head injury in order to make the path...Princess Diana, Oct. 1996.

''இந்த அக்டோபர் 1996 ம் நாளில் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்து உதவிசெய்பவர் யாரும் உண்டோ என்று ஏங்கிய வண்ணம் இருக்கிறேன். எனது கணவரோ (சார்லஸ்) என்னை கார் விபத்துக்குள்ளாக்க விரும்புகிறார். எனது காரின் வேகம் நிறுத்தியை செயலிழக்கச்செய்தும் எனது தலையில் பயங்கர காயத்தை ஏற்படுத்தியும் அதை நிறைவேற்ற முயற்சிக்கிறார்...''

இந்நிலையில் டோடி என்னும் இமாத் முஹம்மது அல் ஃபாயித் என்ற முஸ்லிம் இளைஞரை தனக்கு ஆதரவு அளிப்பவராகக் கண்டு காதலித்தார். வழக்கம்போல இருவருக்கும் உள்ள உறவு பற்றிய சர்ச்சையில் மீண்டும் சிக்கினார். 

கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும், நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் தகுதியானவர்கள். (24:26)

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும் தீய வழியாகவும் இருக்கின்றது. (17:32)


டோடியின் பழக்கம் ஏற்பட்ட பின்னர் எயிட்ஸ் நோயாளிகளுக்கு சேவைகள், தர்ம அரக்கட்டளைகள் நிறுவுதல் என்று சற்று மாறத்துவங்கிய டயானா மக்கள் சேவை புரிதலே தான் தன் தலையாயக் கடமை என்றார். அன்பு, மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையில்லா போக்குகள் பற்றி பொதுப்படையாக பேசத் துவங்கினார்.

I think like any marriage, especially when you've had divorced parents like myself; you want to try even harder to make it work. So many people supported me through my public life and I will never forget them. The biggest disease this day and age is that of people feeling unloved. The greatest problem in the world today is intolerance. Everyone is so intolerant of each other. The kindness and affection from the public have carried me through some of the most difficult periods, and always your love and affection have eased the journey. Nothing brings me more happiness than trying to help the most vulnerable people in society. It is a goal and an essential part of my life - a kind of destiny. Whoever is in distress can call on me. I will come running wherever they are. - Princess Diana

அந்த நேரத்தில்தான் அவர் யூகித்த அந்த படுகொலை சம்பவம் நடந்தும் விட்டது. 1997 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31 ம் தேதி நல்லிரவு. உலகிலேயே அதிகவிலையும், பாதுகாப்பும் நிறைந்த கார்களில் ஒற்றாகக் கூறப்பட்ட அந்தக்கார் இளவரசி டயானாவையும், அவரது அப்போதைய காதலர் டோடி ஃபாயிது, இவர்களுக்கு மெய்க்காப்பாளர் ஒருவர், மற்றும் ஓட்டுனர் என்று நாள்வரை சுமந்து சென்றது. டயானாவின் கவிர்ச்சியான தோற்றத்தை புகைப்படமெடுத்து பரபரப்பு செய்திகளை வெளியிட காத்துக்கிடந்த பத்திரிக்கை புகைப்படக்குழுவினர் டயானாவின் காரைபின்தொடர்ந்ததாக தகவல். பாரிஸ் நகர சுரங்கப் பாதையில் அதிவேகத்தில் சென்ற டயானாவின் கார் பெரும் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சிலவினாடிகளில் டோடி ஃபாயிதும் ஓட்டுனரும் இறந்துபோயினர். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த டயானா சிகிச்சை பலனிற்றி இறந்தார். அவரது மெய்காப்பாளர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டயானா ரசிகர்களின் கோபக்குமுறல்கள் அந்த புகைப்படக் குழுவினரை நோக்கி பாய்ந்தன. 

ஃபிரான்ஸின் தடவியல்துறையினருடன், உளவுத்துறையினரும் களத்தில் இறங்கி விபத்து குறித்தி நடத்திய புலன் விசாரனையில் ஓட்டுனர் அதிகம் மது அருந்தியிருந்ததாகவும் அதனாலேயே கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் கூறி விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

டயானா இறந்த ஒரு வாரத்திற்குள் 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை டயானா பெயரில் தானம் செய்து ஃபிரான்ஸின் ஸ்பென்ஸர் குடும்பம் டயானாவின் இறப்பின் துக்கத்தை வெளிக்காட்டினர். மேற்கத்திய பத்திரிக்கைகள் இப்படுகொடுலையை இப்படி எழுதின அவள் அரசகுடும்பத்தில் ஒருத்தியாக இருந்தும் அவர்களாளேயே பலிவாங்கப்பட்டார். [She was "one of them" (the royal family) and yet was also victim of them]

டயானாவின் உடல் அடக்கம் 1997 செப்டம்பர் 6 ம்நாள் நடைபெற்றது. தனது இருமகன்கள் மற்றும் முன்னால் கணவர் சார்லஸ், அவரது அரசகுடும்பம் மற்றும் டயானா தன் பொறுப்பில் துவங்கிய 110அறக்கட்டளைகளிலிருந்தும் பிரதிநிதிகள் உட்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட அவரது இறுதி ஊர்வலத்தை இப்பூமியில் பாதிக்கும் அதிகமான மக்கள் அன்று தொலைக்காட்சி மூலம் கண்டதாகத் தகவல். அதனால்தானோ என்னவோ பிரிட்டனை ஆளும் வின்ட்ஸர் அரசாங்கம் தங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அனுதாபம் தேடிக் கொண்டனர்



அவர்கள் தேடிய அனுதாப அலையில் மண்ணை அள்ளிப்போடும் முகமாக டோடியின் தந்தை முஹம்மது அல் ஃபாயித் பத்திரிக்கையாளர்களை அழைத்து அதிர்ச்சி பேட்டியளித்தார். அதாவது தன் மகன் டோடி மற்றும் டயானாவின் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் பிரிட்டனின் அரசகுடும்பத்தின் நேரடி ஈடுபாட்டுடனேயே இப்படுகொலை நடந்துள்ளது என்றும், அமெரிக்காவின் சிஐஏ வும்,பிரிட்டனின் உளவுத்துறையுமே இப்படுகொடுலையைச் செய்தனர் என்றும் உண்மைகளை போட்டு உடைத்தார்.

ளவரசி டயானா கார் விபத்தில் இறக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டார் என்ற தகவலும் பரவலாக கிளம்பியுள்ளது. இதை இங்கிலாந்தின் முன்னணி வக்கீல் மைக்கேல் மேன்ஸ் பீல்ட்தெரிவித்துள்ளார்.  டயானா - டோடி அல் ஃபாயித ஆகியோருக்கு இடையே இருந்த உறவை முறிப்பதற்காக இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. அல்மா சுரங்க சாலையில் நிகழ்ந்த கார் விபத்து

முன் கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட கொலை சதி என்றும் அவர் கூறியுள்ளார்.




The Princess of Wales was assassinated by MI6 and the CIA not merely because she was about to marry a Muslim but also because she was being "courted" by supporters of the Merovingian Bloodline - of which she herself was a member...[she] posed such a threat to the future of the British Royal Family.  The Sion Revelation p. 288


The maiden with the title of Princess of Wales died on August 31, 1997 at 4:05 AM. No one seems to have taken notice, but the moment she died, her zenith was aligned precisely with the birth zenith of the Prince of Wales. The death of the Princess of Wales meant a rebirth of the Prince of Wales. She had came to prepare him to become a King. Saturn sat upon the passageway to the bottom of the sea. Like the Phoenix, Diana was the Holy Grail who came to carry the sword Excalibur for the distance of one lifetime. When her spirits had passed the bottomless pits of self despair, she pulled on the handle of the Excalibur ancient sword. Thereafter, she became a Queen of a Princess to all England. In the end she was taken to a lake just like Excalibur, the Lady of the Lake...her soul was cast upon the sacred waters. Is this a sad ending to a legend, or was something else at work in the Heavens? Secrets of the Code p. 298

நாம் இங்கு சொல்ல வருவது டயானாவின் படுகொலைப் பற்றியது அல்ல. அதன் பின்னனியில் உள்ள ஷைத்தானிய இல்லுமினாட்டிகளின் திட்டம் பற்றிதான்.

1) ஆம் விவாகரத்திற்குப் பின்னர் டோடியிடம் தஞ்சம் புகுந்த டயானா கர்ப்பம் தறித்திருக்கிறார் என்ற செய்தியும் பரவலாக அடிபட்டது. வருங்கால லூசிஃபர் மன்னன் வில்லியமின் தாய் ஒரு (பெயர்தாங்கி) முஸ்லிமுக்கு மனைவியா? அதன் மூலம் ஒரு முஸ்லிம் குழந்தையையும் பெற்றெடுக்க இருக்கிறாளா? என்ற செய்தி வின்ட்ஸர் அரசவைக்கு பெருத்த கலக்கத்தை ஏற்படுத்தியது. இதை தங்கள் மிரோவிஞ்ஸியன் வம்சவழிக்கு பெரும் அவமானமாகக் கருதினர்.



2) டயானா உயிரோடு இருந்தால் வில்லியம் என்ற மிரோவிஞ்சியன் லூசிஃபர் இளைஞரை பிரிட்டனின் மன்னராக்க இயலாது. அந்த வாய்ப்பு சார்லஸூக்கோ அல்லது டயானாவுக்கோ போகும் நிலைதான் இருந்தது. இவர்களின் ஷைத்தானிய நம்பிக்கைபடி இவ்வுலகை இக்கூட்டம் ஆண்டு அந்தி கிருஸ்துவை வரவழைக்க வேண்டுமெனில், இளவரசன் வில்லியமுக்கே முடிசூட்டவேண்டும்.

3) எலிசபெத்தின் மறைவிற்குப் பின்னர் சார்லஸ் தன் மகனுக்காக பட்டத்தை விட்டுக்கொடுத்தாலும், தன் மாமியார் எலிசபெத்தைவிட, கணவர் சார்லஸை விட உலகில் அதிக பிரபலமடைந்துவிட்ட இளவரசி டயானா பிரிட்டனின் ஆட்சி பீடத்திற்கு வந்துவிடுவாரோ என்ற எண்ணம் வின்ட்ஸர் குடும்பத்திற்கு இருந்தது.


4) டயானாவின் வேலை தன் இரத்தத்திலிருந்து வின்ட்ஸர் பரம்பரையில் ஒரு குழந்தையை ஈன்றெடுத்துக் கொடுப்பதே. அந்த வேளை முடிந்துவிட்டபடியால் அவளுக்கு விடைகொடுத்துவிட்டு வில்லியமை பட்டத்திற்காக முழுவீச்சில் தயார்படுத்துகிறார்கள். 

டயானாவின் மரணத்திற்குப் பின்னர் வில்லியமுக்கு அவசர அவசரமாக முடிசூட்டும் வேலையும் படுஜோராக நடக்கிறது. அவர் பள்ளிக்குச் செல்வது முதல் தனது காதலியோடு ஊர்சுற்றித் திரிவதுவரை படமெடுக்கப்பட்டு வில்லியம் ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போல மீடியாக்களில் பரப்பப்படுகிறது.


வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு துதிசெய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன். (64:1)


நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? (2:107)



மனிதர்களே! உங்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை, அவர்கள் அநியாயம் செய்த போது நிச்சயமாக நாம் அழித்திருக்கின்றோம். அவர்களிடம் அவர்களுடைய இறைத்தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள் எனினும் அவர்கள் நம்பவில்லை - குற்றம் செய்யும் மக்களுக்கு நாம் இவ்வாறு கூலி கொடுக்கின்றோம். (10:13)