Monday, January 7, 2013

அழிக்கப்பட்ட சமூதாயமும் படிப்பினை பெற வேண்டிய எமது சமூகமும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகதுஹு


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 


அழிக்கப்பட்ட சமூதாயமும் படிப்பினை பெற வேண்டிய எமது சமூகமும்



இன்று உலகளவில் பல வகையான இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்ட வண்ணமும் இன்னும் நிறைய இயற்கை அனர்த்தங்களை எதிர்பார்த்த வண்ணமும் இன்றைய உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிவினை நோக்கி பயணித்து கொண்டு இருக்குது. இந்த சந்தர்பதிலே முஸ்லிம்களாகிய நாம் என்ன செய்து கொண்டிருகுறோம் எமது மனசாட்சியை தொட்டு பார்க்கவேண்டிய நேரம் நாங்கள் அல்லாஹ்வை மறந்த அவனது தண்டனைகளை மறந்து எமது மனோ இச்சைகளின் படி எமது வாழ்கையை நாம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.


அல்லாஹ் பாதுகாக்கவேண்டும் எம்மையும் எமது சமுகத்தையும், இன்று இந்த உலகம் சந்தித்துக்கொண்டு இருக்கும் இயற்கை அனர்த்தங்கள் ஏன் ஏற்படுகிறது என்று நம் சிந்திக்க வேண்டாமா ? அல்லாஹ் அறிவுள்லோருக்கு அத்தாட்சி இருக்கிறது என்று கூறியுள்ளானே நம் எமது சிந்தனைக்கு எடுத்து கொண்டோம ?? அவ்வாறு எடுத்திருந்தல் எமக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயம் பற்றியும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் பற்றியும் நாம் இன்னமும் அல்லாஹ்வை பயபடாமல் இருப்பது தான் ஆச்சரியம். 

இந்த வகையில் முதலாவதாக அல்லாஹ் உடைய தண்டனை அதாபு நபி நுஹ் அலைகிவசலம் அவர்களின் சமுகத்திற்கு அல்லாஹ்வால் இந்த பூமில் இறக்கிவைகப்பட்டது.
இதை பற்றி அல்குரானிலே அல்லாஹ் சுபஹனஹுவதலா சொல்லும்போது " எத்தனையோ நபிமார்களை உலகத்திற்கு அனுப்பினோம் அந்த நபிமார்களுக்கு மாற்றம் செய்த மனிதர்களை நாம் பிடித்தோம் பிடித்ததெல்லாம் அநியாயமாக பிடிக்கவில்லை அவரவர் செய்த பாவத்திற்கு ஏற்ப அவர்களுக்கு நாம் தண்டனை கொடுத்தோம் சிலபேரை நாம் புயல் காற்றைகொண்டு அழித்தோம், சிலபேரை பாரிய சப்தங்களை ஏற்படுத்தி அவர்களுடைய உள்ளங்களும் காதுகளும் வெடித்து அதே இடத்தில் செத்து மடியசெய்தோம், சிலபேரை வெள்ளத்தின் மூலமாக  அழித்து நாசமக்கினோம்சிலபேரை கல்மாரி பொழிந்தும் இல்லாமல் ஆக்கினோம், சிலபேரை நெருப்பு மழை பொழிந்து அழித்து நாசமக்கினோம், சிலபேரை நாம் இந்த பூமிக்குள்ளே சுழிவாங்கி  நாசமக்கினோம், என்று புனித அல் குரான் சொல்கின்றது. இதை அல்லாஹு தாஆல சொல்கிறான் விண்ணிலிருந்து இறக்கிவைக்கப்பட்ட தண்டனைகள் தாம் இவை.

இந்த வகையில் நபி நுஹ் அலைகிவஸ்ஸலாம் அவர்களின் சமூகத்திற்கு அல்லாஹுடைய தண்டனை முதலாவதாக இறக்கி வைக்கப்பட்டது. எம் அனைவர்க்கும் நபி நுஹ் அலைகிவஸ்ஸலாம் அவர்களின் வரலாறு அதனால் சுருக்கமாக அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பற்றி இங்கு பார்போம். ஒவ்வொரு நபிமர்களுடைய வரலாறையும் அல்லாஹ் கூறுகின்ற போது அந்த நபி அந்த உம்மதினருக்கு செய்கின்ற பயானில் முதலாவது வாசகத்தை குறிப்பிடுகிறான் "மாலகும் அலதத்தகூன்" உங்களுக்கு என்ன கேடு பிடிதிருகிறது, நீங்கள் அந்த அல்லாஹ்வை பயப்பட கூடாத இதை நபி ஹூத் அலைகிவஸ்ஸலாம் அவர்களும் கேட்டார்கள்,  நபி நுஹ் அலைகிவஸ்ஸலாம்  அவர்களும் கேட்டார்கள், நபி ஸாலிஹ் அலைகிவஸ்ஸலாம் அவர்களும் கேட்டார்கள், நபி மூஸா அலைகிவஸ்ஸலாம் அவர்களும் கேட்டார்கள்,  நபி லூத் அலைகிவஸ்ஸலாம் அவர்களும் கேட்டார்கள்,  நபி சுகைப் அலைகிவஸ்ஸலாம் அவர்களும் கேட்டார்கள்,  இந்த நபிமர்களுடைய உம்மதுகள் எல்லாம் அல்லாஹுடைய அதாபு / தண்டனை பெற்றவர்கள் 


நபி நுஹ்  அலைகிவஸ்ஸலாம் அவர்கள் 950 வருடங்களாக பாடுபட்டார்கள். அல்லாஹு தாஆல  வஹி இருக்கிறான் நுஹே நீர் எவ்வளவு பாடு பட்டாலும் அது அர்த்தமற்றது நபி கேட்கிறார்கள் ஏன் யா அல்லாஹ் ? இப்போது ஈமான் கொண்டு இருப்பவர்களை தவிர ஏனைய ஒருவர் கூட ஈமான் கொள்ளமாட்டார்கள், பிறக்கின்ற குழந்தை கூட ஈமான் கொள்ளாது. பலவிதமான சோதனைகளை அல்லாஹ் கொடுத்து பார்த்தான் ஒரு கட்டத்திலே நாற்பது வருடமாக அந்த ஊர் பெண்கள் யாருக்குமே ஆண் குழந்தை கிடைக்கவில்லை, வருட கணக்கில் அல்லாஹு தாஆல மழையை நிறுத்தினான் கடைசியாக சொல்லுகின்றான் நீங்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி நுஹ்  அலைகிவஸ்ஸலாம் அவர்கள் சபமிடுகிறார்கள் யா அல்லாஹ் யாரையும் விட்டு வைக்காதே " வலதாதாக் லாம் யளித்து இல்லாஹ் பாதிரன் கப்பாராஹ்" இவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகூட காபிரகத்தான் பிறக்கின்றது இவர்கள் ஒருதரைகூட விட்டுவைக்காமல் பூண்டோடு அழித்து நாசமகுவயாக ?. நபியகளுக்கு கப்பல் கட்ட சொல்லபடுகிறது கப்பலும் கட்டப்படுகிறது,கிட்டத்தட்ட 2000 முலம் நீளமும 600 முலம் அகலமான கப்பல் மூன்று தட்டுகள் கொண்டது அது சாதாரண கப்பல்அல்ல  ஏன் என்றால் அந்த கப்பல் நீந்தவேண்டிய கடல் இருக்கின்றதே அதை இந்த உலகம் கண்டிராது மழை பொழிய ஆரம்பிக்கிறது இந்த மழையை பற்றி இமாம்கள் சொல்லும் போது அந்த மழை துளி உடைய தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரும் பெரும்  தோற்பைகளை மேலிருந்து ஊற்றினால் எப்படி இருக்குமோ  அவ்வாறு ஒவ்வொரு மழை துளிஉடைய அளவு இருந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இந்த மழை பற்றி அல்குரன் கூறுகின்ற போது வபரதன்நூர் என்று இந்த மழையை வர்ணிக்கின்றது, அவர்கள் அடுப்பு மூடுகின்ற பாறாங்கல்லில் இருந்தும் நீர் ஊற்றெடுத்தது வானத்திலிருந்தும் மழை பொழிந்தது. நபி நுஹ்  அலைகிவஸ்ஸலாம் அவர்களின் துஆ எப்படி 
 ஒருதரைகூட விட்டுவைக்காமல் பூண்டோடு அழித்து நாசமக்கவேண்டும். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைகிவஸ்ஸலாம் அவர்கள் இந்த சம்பவத்த்தை சொல்லுகிறபோது வெள்ளம் வருகிறது வெள்ளத்திற்கு பயந்து மக்கள் அங்கும் இங்கும்  ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் தண்ணீர் மனிதர்களை துரத்துகின்றது சிலபேர் மலை உச்சியை நாடி ஏறுகிறார்கள் அதிலே ஒரு பெண்மணி தனது பச்சிளம் குழந்தையை சுமந்துகொண்டு வெள்ளத்திற்கு பயந்து மலை  உச்சியை நாடி ஏறுகிறால் அவள் ஏற ஏற  வெள்ளமும் அவளை துரத்துகிறது மலை உச்சியை அடைந்துவிட்டால் என்ன ஆச்சரியம் வெள்ளம் அவள் காலை தொடுகின்றது மெல்ல  மெல்ல  அவளது கழுத்து மட்டம் வரை உயர்ந்து வருகிறது அவள் வெள்ளத்திற்கு பயந்து தான் இறந்தாலும் பரவாயில்லை தனது குழந்தையை காப்பாற்றும் எண்ணத்தில் இரண்டு கைகளையும் உயர்த்தி நுனி காலில் நிற்கிறாள் ஆனாலும் வெள்ளம் விடுவதாக இல்லை இருவருமே மூழ்கி இறக்கின்றார்கள். அல்லாஹுதஆலா இந்த வெள்ளத்தில் யாரையாவது காப்பற்ற நினைத்திருந்தால் இந்த குழந்தை மிக அருகதையுள்ள குழந்தை ஆனாலும் அல்லாஹ் ஒருவரை கூட விட்டுவைக்கவில்லை எல்லாரையும் அழித்து நாசமகினான். இந்த வெள்ளத்தை பற்றி சொல்லும்போது முழு உலகமும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது. பூமி மட்டத்தில் இருந்து சுமார் என்பது மைல் உயரத்திற்கு வெள்ளத்தால் நிரப்பப்பட்டது கிட்டத்தட்ட என்பது முஸ்லிம்களையும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட உயரினங்களின் ஒவ்வொரு ஜோடியை தவிர மிகுதியான எல்லா படைப்புகளும்  அழித்து நாசமக்கப்பட்டது. அவர்கள் செய்த பாவம் என்ன ? மூன்று விடயங்களைக்கொண்டு நபி நுஹ்  அலைகிவஸ்ஸலாம் அவர்கள் கட்டளை பிறபித்தர்கள் முதலாவது இபாதத்தை சரியாக செய்யுங்கள். இரண்டாவது தக்வா மூன்றாவதாக உங்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட என்னுடைய கட்டளைகளை பின்பற்றவேண்டும். நபி நுஹ்  அலைகிவஸ்ஸலாம் அவர்கள் இந்த மூன்றை கொண்டும் ஏவினார்கள் அவர்களுடைய உம்மது மாற்றம் செய்தார்கள் உலகம் அளிக்கப்பட ஆரம்பிகுறது.  நபி நுஹ்  அலைகிவஸ்ஸலாம் அவர்களுடைய உம்மதுக்கள் செய்த பாவம் பிறக்கின்ற குழந்தை பருவமடைகிற போது அந்த குழந்தைகளின் தந்தைமார் உபதேசம் செய்வார்களாம் நான் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எதுநடந்தாலும் நீங்கள் நுஹையும் அவரது இறைவனையும் பின்பற்றாதீர்கள் என்றும் இறகின்றபோது அவர்களுடைய குழந்தைகளை அழைத்துச் சொல்லுவார்கள் என்னுடை ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் நீங்களும் உங்களுடைய சந்ததிகளும் நுஹையும் அவரது இறைவனையும் பின்பற்றக்கூடாது. இப்போது பூமியை சுத்தம் செய்யவேண்டிய நிலை குப்ரினாலும் ஷிர்கினாலும் அழுக்கடைந்த பூமியை சுத்தம் செய்ய வெள்ளத்தை விட சிறந்த தண்டனை கிடையாது அசுத்தமான பொருட்களை சுத்தம் செய்வதற்கு தண்ணீரை விட சிறந்த பொருள் கிடையாது எனவே வெள்ளம் வந்தது அழித்து நாசமக்கபட்டர்கள். இன்று இதே பாவம் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது எம்மில் எத்துனை பேர் இபாதத்தை சரியாக செய்கிறார்கள் இபாதத்தை சரியாக செய்கிறவர்கள் தக்வா தனிமை இருக்கும் போது அல்லாஹ்வை அஞ்சுகிற தன்மை எத்தினை பேரிடத்தில் இருக்கிறது நபிகள் நாயகம் அவர்களின் சுன்னத்துகளை அணுவளவும் பிசகாமல் பின்பற்றககூடியவர்கள் எம்மில் எத்தனை பேர் இருக்கின்றோம். இந்த பாவத்தை செய்தார்கள் அழிந்து நாசமனர்கள். சிந்திக்கின்றோமா நாம் ?

அடுத்து வந்தார்கள் நபி ஹூத் அலைகிவஸ்ஸலாம் 


இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் நபி ஹூத் அலைகிவஸ்ஸலாம் அவர்களுடைய கூட்டத்திற்கு வழங்கபட்டதண்டனையை பற்றி பார்போம்.. 



No comments:

Post a Comment