Wednesday, August 8, 2012

கலீபா உமர் இப்னு கத்தப் (ரலி)




அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபாரகதுஹு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


கலீபா உமர் இப்னு கத்தப்  (ரலி) 

பிற சமய மக்களின் வழிப்பாட்டு உரிமையை எவ்வாறு இஸ்லாம் பாதுகாத்துள்ளது என்பதை பறைச்சாற்றும் வகையில் 

" அல்லாஹ்வின் அடிமையும் மூமீன்களின் கலீபாவுமாகிய உமரிடமிருந்து: ஜெரூஸலம் நகரவாசிகளின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் இந்த ஒப்பந்தம் பாதுகாப்பளிக்கிறது. 

அவர்களுடைய தேவாலயங்களும் சிலுவைகளும் பாதுகாக்கப்படும். 

இந்த ஒப்பந்தம் நகரின் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானதாகும். அவர்களின் வணக்கத் தலங்களில் வழிபாடுகள் செய்ய எந்த தடையும் இல்லை. 

அவை முஸ்லிம்களின் அதிகாரத்துக்கு உட்படுத்தப்படவோ உடைக்கப் படவோ மாட்டாது. 

மக்கள் அனைவரும் தங்களது மார்க்கத்தை பின்பற்றும் சுதந்திரம் வழங்கப்படுகிறது. அவர்கள் எந்த விதமான பிரச்சினைகளுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்......"

நகரின் வாசல்கள் திறக்கப்பட்டன. உமர் (ரலி) அவர்கள் நேராக மஸ்ஜிதுல் அக்ஸா (Temple of David)  ஐ நோக்கிச் சென்றார்கள். அங்கு David's Arch இன் கீழ் தொழுதார்கள். 

பின்னர் நகரின் மிகப் பெரிய கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்றார்கள். அவர்கள் அங்கிருந்த வேளை ழுஹர் தொழுகைக்கான நேரம் வந்தது. "நீங்கள் இங்கேயே தொழுது கொள்ளலாம்" என்று தேவாலயத்தின் பிஷப் கூறினார். " இல்லை, இல்லை", உமர் (ரலி) சொன்னார்கள், 

" நான் இவ்விடத்தில் தொழுதால், இந்த இடத்தை உங்களிடமிருந்து கைப்பற்றுவதற்குக் காரணமாக ஒரு காலத்தில் இதை முன் வைக்க முடியும்". 

பின்னர் தேவாலயத்தின் படிக்கட்டுகளில் நின்று தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்னர் பிஷப்பிடம் ஒரு கடிதத்தையும் கையளித்தார்கள். அதன் வாசகங்கள் பின்வருமாறு இருந்தன. "இந்தப் படிக்கட்டுகள் அதான் சொல்லும் இடமாகவோ கூட்டுத் தொழுகை நடாத்தப்படும் இடமாகவோ எச்சந்தர்ப்பத்திலும் இருக்கக் கூடாது."

இஸ்லாம் கூறும் மதநல்லிணக்கம் 

சமத்துவம்;
நீதி நேர்மை என்ன என்பதை உலக ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய உமர் (ரலி) அவர்களின் செங்கோல் ஆட்சிக் காலத்தில் ஒரு யூதனுக்கும்,முஸ்லிமுக்கும் பிரச்சனை ஏற்பட இருவரும் நீதி தேடி கலீபா உமர் ரலி அவர்களிடம் வந்து முறையிடுகின்றனர்.

இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த கலீபா அவர்கள் யூதனின் பக்கம் நியாயம் இருப்பதை அறிந்து அவனுக்கு சாதகமாக தீர்ப்புக் கூறினார்கள் பிரதிவாதி முஸ்லிம் தன் இனத்தை சார்ந்தவர் அல்லது தன் மார்க்கத்தை சார்ந்தவர் என்பதற்காக அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்கவில்லை. இங்குதான் மதநல்லிணக்கம் உணர்த்தப்படுகின்றது.

சமநீதி;
கலீபா உமர் ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றுமொரு நிகழ்ச்சி உங்களின் மனதைத் தொடும் என நினைக்கிறேன் ஹஜ்ஜுடைய காலத்தில் ஒரு சமயம் கலீபா உமர் ரலி தம்இருப்பிடம் அமர்ந்திருக்க அருகில் அம்ரு பின் ஆஸ் ரலி அவர்களும் அவரது மகன் அம்ரு என்பவரும் அமர்திருந்தனர் 

அச்சமயம் மிஸ்ரு நாட்டைச் சார்ந்த ஒரு மாற்று மதத்தவன் கலீபாவிடம் வந்து இதோ உங்களுக்கு அருகில் அமர்ந்திருக்கக் கூடிய அம்ரு என்னை அநீதமாக அடித்து விட்டார் அவரிடம் நான் உங்களைப் பற்றி கலீபாவிடம் முறையிடுவேன் எனக் கூறியபோது அவர் என்னிடம் தாரளமாகக் கூறிக்கொள் நான் சங்கை மிக்க கவர்னரின் மகனாவேன் எனவே கலீபா (மாற்று மத்ததவனான) உனக்கு எதிராக என்னை ஒன்றும் செய்துவிடமட்டார் எனக்கூறினார் 
இது பற்றி தங்களிடம் நீதி கேட்டு வந்துள்ளேன் எனக்கூறி நின்றான்.

அதைக்கேட்டு கலீபா அவர்கள் கோபமுற்றவர்களாக அந்த மிஸ்ரு நாட்டவனிடம் சவுக்கைக் கொடுத்து கண்ணியமிக்க கவர்னரின் மகன் உன்னை அடித்ததைப் போன்று நீயும் அவரை அடித்து பழிதீர்த்துக்கொள்! எனக் கூறி நீதிக்கு முன் ஆட்சியாளர்,பொது மக்கள் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியதோடு நீதிக்கு முன் சாதிமத வேறுபாடு இல்லை என்பதை உணர்த்தி மதநல்லிணக்கத்திற்கு ஓர் முன்னுதாரணம் கட்டினார்கள்.

No comments:

Post a Comment