Wednesday, June 8, 2016

மாவீரன் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) (கி.பி. 1137-1193)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகதுஹு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.


மாவீரன் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) (கி.பி. 1137-1193)

கி.பி. 636 ஆம் ஆண்டு இரண்டாம் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் தளபதி காலித் இப்னு வலிது (ரலி) அவர்கள் தலைமையில் ரோமப் பேரரசின் பிடியில் சிக்கிச் சீரழிந்த ஜெருசலம் உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதி இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு வசித்த கிறிஸ்துவர்களும், யூதர்கலும் பகைமையை விட்டு விட்டு சுதந்திர காற்றை சுவாசித்தனர். கிருத்துவத் திருசபை ஒன்று கூடி கலிபா உமர் (ரலி) அவர்களை கம்பளம் விரித்து வரவேற்றனர். ஆனால் ரோமப் பேரரசும், ஐரோப்பிய உலகமும் வெறி பிடித்துக் கதறியது, பழிவாங்க காத்திருந்தனர். ஒன்றல்ல... இரண்டல்ல.... சுமார் 450 ஆண்டுகள் கடந்தன..!

11ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களுக்கு மத்தியில் விரோதமும், குரோதமும் தலைக்கேரியதன் காரணமாக சக முஸ்லிமை அழிக்க ஐரோப்பிய திருச்சபைக்கு சிலர் அழைப்பு விடுத்து மாபெரும் பிழையை செய்தனர். இந்த வாய்பை பயன்படுத்திய அவர்கள் தங்களுடைய 450 வருட பழியை தீர்த்து ஜெருசலத்தை மீட்க களத்தில் இறங்கினர். சிலுவை போர் என்ற பெயரில் அழைப்பு விடுத்து ஜெருசலத்தை நோக்கி வந்தனர். வரும் வழியில் கண்ணில் கிடைக்கும் முஸ்லிம்கள், பள்ளிவாசல்கள் என அனைத்தையும் அழிந்தனர். சரியாக 450 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிளவின் காரணமாகவும் மார்க்கத்தை சரியாக பேணாததின் விளைவின் காரணாமாக 1095 ஆம் ஆண்டு நமது (முஸ்லிகளின்) முதல் கிப்லா அவர்களின் கையில் சென்றது.

முதல் கிப்லாவை இழந்த உலக முஸ்லிம் சமூகம் தனது நிலையை எண்ணி வருந்தியது, இழந்த நிலத்தையும், இறையில்லத்தையும் மீட்டிட 40, 50 ஆண்டுகளாக தொடந்து சிறு சிறு போர்கள் செய்துக்கொண்டு இருந்தனர். ஈராக்கின் “சதாம் ஹுசைன்” பிறந்த அதே ஊரில் சரியாக கி.பி 1137ஆம் ஆண்டு பிறந்த ஒருவர் தனது இளம் பருவத்தில் சிலுவை படையினருக்கு எதிரான இராணுவத்தில் ஒரு சாதாரண வீரராக சேர்த்து அத்துடன் சிரியாவின் உயர்தரமான மதரஸாவில் மார்க்கக் கல்வியோடு, வரலாறு, சட்டம், அரபு மொழி என பல துறையில் அறிவோடு விளங்கியதன் விளைவாக சாதாரண வீரன் என்ற நிலையிலிருந்து இராணுவ தளபதி என்ற நிலைக்கு உயந்தியது. ஜெருசலேத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வீரமும், விவேகமும், பொறுமையும் இவரை மீண்டும் தளபதியிலிருந்து எகிப்தின் ஆளுனராக பதவி உயர்த்தியது. யார் அந்த மாவீரன்? “சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்)”

பொறுப்புக்கு வந்த உடன் சூடான், ஈராக், எகிப்து, சிரியா உள்ளிட்ட பகுதிகளை ஒருக்கிணைத்து முஸ்லிகளை உச்சகட்டப் போருக்கு ஆயத்தம் செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இராணுவத்துடன் தங்கி இராணுவ வீரர்களுக்கு நவீன ஆயுதங்கள் பயன்படுத்தும் முறை, ஜெருசலத்தின் வரலாறு, ஜெருசலத்தை மீட்க வேண்டிய கடமை மற்றும் ஷஹிதால் கிடைக்கும் அந்தஸ்தை பற்றியும் சொல்லி ஒரு வலுவான இராணுவ வீரர்களை உருவாக்கினார். சலாஹுத்தீன் அவர்கள் மிகப் பெரிய போருக்கு தயாராகிறார் என்பதை தெரித்து கொண்ட ஜெருசலமின் அரசன் “லுசிக்ணன்” என்பவன் முந்திக் கொண்டு சிரியா மீது தாக்குதல் கொடுக்க தயாரானான்.
சலாஹுத்தீன் அய்யூபி வீரர்தான். அதில் சந்தேகமில்லை. ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றுவதென்பதும் சாதாரண விஷயமில்லை. ஆனால் நமக்குத் தெரிந்த அலெக்சாண்டர் போலவோ, ஒளரங்கசீப் போலவோ மாவீரனாக இவரை சரித்திரம் ஓரிடத்திலும் சொல்லுவதில்லை. ஆனால், அன்றைய மத்திய ஆசியாவெங்கும் ஆண்டுகொண்டிருந்த மன்னர்களிடையே 'சலாஹுத்தீன்  அச்சம்' என்பது ஒரு தவிர்க்கமுடியாத நோயாகப் பரவியிருந்தது இதன் அடிப்படைக் காரணமாகிறது. 

கி.பி. 1187 ஜுலை மாதம் நான்காம் தேதி “டைபரியாஸ்” என்ற பகுதியில் இஸ்லாமிய இராணுவமும் லுசிக்ணன் இராணுவமும் மோதின. அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற வேண்டி களம் இறங்கிய இஸ்லாத்தின் போராளிகளுக்கு அல்லாஹ் மகத்தான வெற்றியை பரிசாக அளித்தான். கி.பி. 1095 பறிப்போன பைத்துல் முகத்தஸ் மாவீரன் சலாஹுத்தீன் அய்யூபி அவர்களின் முயற்சியால் கி.பி. 1187 மீண்டும் முஸ்லிகளின் கையில்வந்தது. இச்செய்தி ஐரோப்பிய உலகை உலுக்கியது, போப் அர்பன் III என்ற மத பீடத்தின் தலைவர் உட்பட பலர் மாரடைப்பால் இறந்தனர். கி.பி 1095 இல் சிலுவைப் படையினர் முஸ்லிம்களுக்கு செய்த கொடூரத்திற்கு எந்த பழிதீர்க்கும் நடவடிக்கையும் இல்லாமல் அங்கு வாழ்த்த கிறிஸ்துவர்களுக்கும், யூதர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

போரிட்ட சிலுவைப் படையினர்களுக்கு மட்டும் அபராதம் விதித்து அதையும் சலாஹுத்தீன் அய்யுபே செலுத்தி விட்டார். அது மட்டுமல்லாமல் அனைவரும் ஐரோப்பாவிற்கு செல்ல வாகன வசதியும் செய்துக்கொடுத்தார். வரலாற்றில் இப்படி ஒரு அரசனை பார்க்க இயலாது என்ற அளவுக்கு அல்லாஹ்வுடைய தீனையும், பெருமானாரின் போர் நெறிகளையும் கையாண்டார். இந்த நல்ல செயல்கள் தான் இவரை மாவீரன்  சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) என்ற நிலையை பெற்று தந்தது.

ஆனால் நன்றிகெட்ட ஐரோப்பா மீண்டும் படை திரட்டியது. பிரிட்டன் அரசர் ரிச்சர்ட் II (Richard II ) தலைமையில் மூன்றாவது சிலுவை யுத்தம் தொடங்கியது, வருகின்ற வழியில் வாழ்ந்த மூவாயிரதிர்ற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பதிலுக்கு சலாஹுத்தீன் அவர்களின் படையும் பதிலடி கொடுந்தது முன் வரிசையில் வந்த சிலுவை படையினர் தூக்கிலிடபட்டனர். இரண்டு படைகளும் கி.பி 1191 செப்டம்பரில் மோதிக்கொண்டுனர். முஸ்லிம் படையும் சில நேரங்களில் தோல்வியை தழுவியது அவர்களும் தோல்வியை தழுவினார்கள். போரின் இறுதியாக ரிச்சர்டின் சிலுவை யுத்த படை பின்வாங்கி சென்றது. ஜெருசலமும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் முழுவதுமாக முஸ்லிம்களின் கைக்குள் வந்தது.

ரீச்சர்ட் திருப்பி செல்லும் வழியில் அவருடைய குதிரை இறந்த செய்தி கேள்விப்பட்ட சலாவுதீன் அய்யூபி (ரஹ்) தனக்கு எதிராக படை எடுத்து வந்த மன்னர், குதிரை இல்லாமல் இருக்கிறாரா? என்று அவரை கௌரவிக்க மன்னர்கள் மட்டுமே பயன்படுத்தும் உயர்தரமான குதிரையை அனுப்பினார். இப்படி பட்ட உயரிய பண்புகள் கொண்ட சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் கி.பி. 1193 ஆம் ஆண்டு மரணமடைதார். சலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள்  இறந்த போது அவரிடம் இருந்தது ஒரு துண்டு தங்கமும், நாற்பது துண்டுகள் வெள்ளியும் மட்டுமே ஆகும். மற்ற அனைத்தையும் அவர் ஏழைகளுக்கு கொடுத்திருந்தார். 

ஆதாரம்: Bahā' al-Dīn (2002), pp. 147–148 Lyons & Jackson 1982, pp. 325–326


மீண்டும் ஜெருசலத்தை கைபற்ற வேண்டும் என்று சிலுவை யுத்தகாரர்களின் வாரிசுகள் காத்திருந்தனர். ஒரு நாள் ஒரு வருடம் இல்லை 700 வருடங்கள். 19ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் முஸ்லிம் நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டனர் இதனை பயன்படுத்து ஐரோப்பிய சிலுவை யுத்த வாரிசுகள் உதுமானியப் பேரரசை நயவஞ்சகமாக வீழ்த்தி விட்டு ஜெருசலத்தை முஸ்லிம்களிடமிருந்து கைபற்றிவிட்டனர்.

கி.பி. 1917 இல் சிரியா சென்ற பிரிட்டிஸ் படை தளபதி எட்மன்ட் ஆலன் நேராக சலாவுதீன் அய்யூபி அடக்கஸ்தலம் சென்று: “Today The Wars Of Crusaders Are Completed” இன்றோடு சிலுவை யுத்தக்காரர்களின் போர் முடிவு பெற்றது என்று கூறினான். அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் படை தளபதி ஹென்றி கொரோடு அடக்கஸ்தலத்தின் மீது கால் வைத்து: “Awake Salahudeen! We Have Returned, My Presence Here Consecrate The Victory Of The Cross Over Crescent” எழுந்திரு சலாஹுத்தீன்! நாங்கள் திருப்பி வந்திருக்கிறோம்! புனிதத்தன்மை வாய்ந்த என்னுடைய வருகையின் மூலம் சிலுவை, பிறையை வென்றது. 700 வருட பகையை பாருங்கள்.... கடைசியாக 1924 ஆம் ஆண்டு ஜெருசலம் மீண்டும் யூதர்களின் கையில் சென்று விட்டது.
இன்ஷா அல்லாஹ் உதவி நிச்சயமாக முஸ்லிம்களுக்கு கிடைக்கும். பைத்துல் முகத்தஸ் மீட்கபட்டு இஸ்லாத்தின் மடியில் தவழ வேண்டும்.. இன்ஷாஅல்லாஹ் ...!

3 comments:

  1. ஒவ்வொரு முஸ்லிம்களும் தெரிந்து கொள்ள வேண்டிய வீரர் சலாஹூத்தீன் அய்யூப் அவர்கள்

    ReplyDelete
  2. முடிந்தால் இன்னும் சற்று விரிவாக ௭ழுங்களேன்

    ReplyDelete
  3. ஒரு சிறப்பான வரலாறு...

    ReplyDelete